தேடல் தொடங்கியதே..

Sunday 27 May 2012

கீழக்கரை நகராட்சியில் நடைபெற்ற 'டெங்கு காய்ச்சல் தடுப்பு' குறித்த கலந்துரையாடல் !

தற்போது நம் தென் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. இந்த உயிர் கொல்லி நோயை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு ஆக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக அனைத்து உள்ளாட்சி நிர்வாகத்திலும், சுகாதாரத் துறையினரின் ஒத்துழைப்போடு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.




நம் கீழக்கரை நகரில் 'டெங்கு காய்ச்சல் தடுப்பு' குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று (26.05.2012) 4.30 மணியளவில் நகராட்சி கட்டிட உள்ளரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்க்கு நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, துணைத் தலைவர் ஹாஜா முகைதீன் ஆகியோர் தலைமை வகித்தனர்.




வேளானூர் அரசு மருத்துவர் டாக்டர். ராசிக்தீன்,  கீழக்கரை அரசு மருத்துவர் ராஜ மோகன் ஆகியோர் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க, பொதுமக்களின் ஒத்துழைப்பின் அவசியம் குறித்து பேசினர்.  இதில் கீழக்கரையில் உள்ள பல்வேறு பொது அமைப்பினரும், சமூக நல அமைப்பினரும் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.




இந்த கூட்டத்தின் முடிவில், அனைவரின் கருத்துக்களும் பரிசீலிக்கப்பட்டு, பின் வரும் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் விரைந்து எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் உறுதி மொழி அளித்தது.
  •    இந்த டெங்கு நோயை பரப்பும் கொசுக்கள் பகல் நேரத்தில் தான் கடிப்பதால், நகராட்சிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் காலை மற்றும் பகல் வேளைகளில் தொடர்ச்சியாக கொசுக்களை ஒழிக்க புகை அடிப்பது.
  •      டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் அனைத்தும் நல்ல தண்ணீரில் உற்பத்தியாவதால், நம் கீழக்கரை நகருக்கு தண்ணீர் விநியோகம் செய்ய தேக்கி வைக்கப்படும், நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் தொட்டியை உடனடியாக சுத்தம் செய்வது.
  •      கீழக்கரை நகரின் 50 சதவீத குடிதண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் 'மாட்டு வண்டி தண்ணீர்' மற்றும் தனியார் டேங்கர் லாரிகளின் நீர் தேக்க தொட்டிகளை ஆய்வு செய்து, உடனடியாக சுத்தம் செய்ய ஆவண செய்வது.
  •    கீழக்கரை மாலா குண்டு மற்றும் 500 பிளாட் பகுதிகளில் அமைந்திருக்கும் நல்ல தண்ணீர் கிணறுகளில் கம்பூசியா இன மீன்களை விடுவது மற்றும் அதன் சுற்றுப் புறங்களை சுத்தமாக பேணுவது.
டெங்கு காய்ச்சல் என்றால் என்ன? டெங்கு காய்ச்சலின் அடையாளம் மற்றும் அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுக்கும் முறைகள் குறித்த விளக்கங்களை காண, நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை பார்வையிடவும்.
டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?விளக்கங்களுடன் கூடிய செய்தி http://www.keelaiilayyavan.blogspot.in/2012/05/sdpi.html

No comments:

Post a Comment